பெரிய நடிகர்களின் உயர்ந்த சம்பளம் காரணமாக சினிமா நெருக்கடி – திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து
இன்றைக்கு பல முன்னணி நடிகர்கள் ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலே இருந்துவருகிறார்கள். ரூ.100 கோடி, 150 கோடி வரை சம்பளம் பெற்றவர்கள் கூட இப்படியே உள்ளனர். இதற்குக் காரணம் என்ன? கடந்த காலங்களில் தயாரிப்பாளர்களை முழுமையாக சிரமத்தில் ஆழ்த்தியது இதே பெரிய நடிகர்கள்தான்,”என்று தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.